Wednesday, January 6, 2010

ஏதோ நம்மளால முடிஞ்சது!!

2009, ஜனவரி 1 முதல் 7 வரை சாலைப் பாதுகாப்பு குறித்து பொது மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் முகமாக ஒவ்வொரு ஆண்டும் சாலை பாதுகாப்பு வார விழா தேசிய அளவில் ஜனவரி முதல் வாரத்தில் கடைப்பிடிக்கப்படுகிறது. தற்போது கடந்த ஆண்டுகளைப் போல மத்திய அரசு அறிவித்துள்ளபடி 20-வது சாலை பாதுகாப்பு வாரம் 2010 ஜனவரி 1 முதல் 7 வரை கடைப்பிடித்து வருகிறார்கள்.

ஒவ்வொரு ஆண்டும் தேசிய அளவில் சாலை விபத்துக்களில் ஏற்படும் உயிரிழப்பு சுமார் 1,20,000 பேருங்க. தமிழகத்தில் வாகனப் பெருக்கம் ஒவ்வொரு ஆண்டும் சுமார் 10 முதல் 11 சதவிகிதம் வரை அதிகரித்து வருகிறது. 01.11.2009 நிலவரப்படி தமிழகத்தில் 8,66,483 போக்குவரத்து வாகனங்களும் 98,99,761 போக்குவரத்து அல்லாத வாகனங்களும் ஆக மொத்தம் 1,07,66,244 வாகனங்கள் இயங்கி வருகின்றன. அபரிதமான வாகன பெருக்கத்தினாலும், சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு குறைவினாலும், சாலை விதிகளை முறையாக கடைப்பிடிக்காததாலும் 2009 ஆண்டு ஜனவரி முதல் நவம்பர் திங்கள் சாலை விபத்துக்களில் 10,958 உயிர்களை தமிழகம் இழந்துள்ளது. (ஸ்ப்பா.. நன்றி விசயகாந்த்!)

சாலைப் பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து நிர்வாகம் என்பது காவல்துறை மற்றும் அரசு அதிகாரிகளின் பொறுப்பு மட்டுமல்ல, இதற்கு சாலைகளை பயன்படுத்தும் சம்பந்தப்பட்ட அனைவரும் பங்களிப்பு செய்ய வேண்டும் என்று தன்னார்வ தமிழன் ஆதவன் அவர்கள் கேட்டுகொண்டதுக்கினங்க.. ஏதோ நம்மாளால முடிஞ்ச சில பாதுக்காப்பு விளம்பரங்களும்.. கடைசியா ஒரு ஐந்து பேருக்கு ஆப்பும்..

Safety5.jpg picture by rkarasans

Safety6.jpg picture by rkarasans


safety1.jpg picture by rkarasans

safety2.jpg picture by rkarasans

safety4.jpg picture by rkarasans
safety7.jpg picture by rkarasans

safety8.jpg picture by rkarasans

சாலைப் பாதுகாப்புத் தெடர்பான இடுகைகளை எழுத கீழ்வரும் நண்பர்களை (இனிமே நண்பர்களா இருப்பாங்க????) அழைக்கிறேன்.

தன்மான தமிழன் விகொ..

தான தலைவன் ஹாலிவுட் பாலா...

வீர தமிழச்சி சுசி...

அஞ்சா நெஞ்சன் நாஞ்சில் பிரதாப்..

நாட்டுக்கொரு நல்லவன் செந்தில்வேலன்...

(நீங்களும் ஒரு 5 பேரை கூப்பிட்டு உங்க பழிய தீர்த்துக்குங்க!!)

விஸ்கி: நான் எந்த விருதிற்காவும், எந்த திரட்டியிலும், எந்த பிரிவுலும், எந்த சுற்றிலும் கலந்து கொள்ளவில்லை. ஆகவே நண்பர்களே.. எனக்கு ஓட்டு எப்படி போடுவது? என்று சிந்திப்பதை விட்டுவிட்டு நாலு பேருக்கு நல்லது செய்யுங்க! நீங்களும் நல்லா இருங்க!!

Saturday, December 26, 2009

கலக்கல் - 5

><><><><><><><><><><><><><><><>><><><><><><><><><><><><><><><>><><>
பொறங்கால தூக்கி வச்சி வா கண்ணா!!

பதிவர் ‘கண்ணா’ நீநீநீநீண்ண்ண்டடடட 5 மாத கால இடைவேளைக்கு பின் எழுத துவக்கியிருக்கிறார்…அவரை வரவேற்போம்… குனிய வச்சி கும்மியடிப்போம்... நிறைய விஷங்களையும், அனுபவங்களையும் தமிழ்கூறும் (கூறு போடும்!!) எங்களை போல வலைப்பதிவர்களுக்கு தர வேண்டும் என வேண்டுவோம்….வாழ்த்துவோம்……

வாடி.. வா...
<><><><><><><><><><><><><><><>><><><><><><><><><><><><><><><>><><><><><><><><><><><>
சல்யூட் ஃபார் மது & ஆனந்த் பிரகாஷ்

ருச்சிகா பலாத்கார வழக்குல ஹரியானா முன்னாள் டி.ஜி.பி-யான ராத்தோருக்கு, 19 வருஷத்துக்கு பின்னால அவனுக்கு தண்டனை கிடைச்சது எல்லோரும் தெரியும். என்றாலும், அந்த தண்டனையை வாங்கி குடுக்க ருச்சிகாவோட தோழியான ஆராதனா குப்தா குடும்பத்தினரைதான் பாராட்ட தோனுதுங்க எனக்கு!

இவ்வளவு சீக்கிரமா (?) குடுத்த நீதியை பெற அவங்க கொடுத்த விலை என்னன்னனு தெரியுமா? ஆனந்த் பிரகாஷை (ஆராதனாவின் அப்பா) வேலையில் இருந்து சஸ்பண்ட் பண்ணியிருக்காங்க.. ஆராதனாவை காலேஜ் போகும்போது ரவுடிகள் டார்ச்சர் பண்ணியிருக்காங்க.. மது பிரகாஷை (ஆராதனாவின் அம்மா)வீடு புகுந்து மிரட்டி அடிச்சிருக்காங்க.. எல்லாத்துக்கும் மேல இவங்க 300 தடவைக்கும் மேல கோர்ட்டுக்கு அலைந்துதான் இந்த தீர்ப்பை, அந்த அல்லகைக்கு வாங்கிகுடுத்துருக்காங்க!!

""அழிவி னவைநீக்கி ஆறுய்த்து அழிவின்கண் அல்லல் உழப்பதாம் நட்பு.""

நட்புக்காக போராடி நீதியை நிலைநாட்டிய ஆராதனா குடும்பத்துக்கு எல்லோர் சார்பாகவும் ஒரு ராயல் சல்யூட்!!

><><><><><><><><><><><><><><><>><><><><><><><><><><><><><><><>><><><><><><><><><><><>
சோக்காமுல்ல??

2வது படிக்கும்போது வினோத்கிட்ட, டீச்சர் ஒரு கேள்வி கேட்டாங்களாம்..

டீச்சர் : காந்திஜியோட பையன் யாரு?
வினோத் : தினேசன்
டீச்சர் : அடிங்.. இதை யாருடா சொல்லிகுடுத்தது உனக்கு?
வினோத் : L.K.G ல் இருந்து எல்லா மிஸ்சும்.. "காந்தி இஸ் பாதர் ஆஃப் தினேசன்" (தி நேஷன்)ன்னு சொன்னாங்கல்ல?? மறந்துடுவோமா??

><><><><><><><><><><><><><><><>><><><><><><><><><><><><><><><>><><><><><><><><><><><>

அவதாரம் பார்த்த அவதார்

எல்லாரும் பாத்துட்டாங்கனு, ஒரு வழியா நானும் அவதாரை பாத்துட்டேங்க!! (அம்மணமான திரியிற ஊருல.. கோமணம் கட்டுனவன் கோமாளி ஆகிட கூடாதுல்ல??)

டெர்மினேட்டர், டைட்டானிக் கொடுத்த ஜேம்சா இப்டி எடுத்துயிருக்காரு?? தொங்கிபோன கதைக்கு.. ஜாக்கி குடுத்து நெம்பி இருக்காரு?? கிழவிக்கூட களவி ஆடுன மாதிரி எல்லாமே வேஸ்டா பூட்ச்சே நைனா!! இருந்தாலும் டெக்னாலஜி 1,2,3,4 க்காக பார்க்கலாம்.(நன்றி ஹாலிவுட் பாலு!)

1200 கோடி செலவு செஞ்சாங்கலாம் படத்துக்கு... அதுல ஒரு 120 ரூபா செலவு செஞ்சி, ஹீரோவுக்கு நல்லதா 4 டீ ஷர்ட் எடுத்து குடுத்துயிருக்கலாம்! கப்படிக்குது... படம் முழுக்க ஒரே டீ சர்ட்டுல வர்றாரு.. இதுக்குன்னே, ஜேம்ஸ் கேமரூனை கட்டிப்போட்டு தமிழ் படம் பாக்க வச்சிட்டு சொல்லனும்.. "பாத்தியில்ல?? எங்க ஹீரோங்க.. எப்டி ஒரே ஃப்ரேம்ல ஆறு டிரஸ்ல நடந்து வர்றாங்கன்னு?" திருந்துங்க சேம்சு!!

><><><><><><><><><><><><><><><>><><><><><><><><><><><><><><><>><><><><><><><><><><><>
2010

2009-துல உங்களை எல்லாம் பல நேரங்கள்ல பின்னூட்டம் வழியாவும், பதிவு போட்டும்..

தெந்தரவு செஞ்சிருக்கேன்..., பிரச்சனை கொடுத்துயிருக்கேன்.., எரிச்சல் படுத்தியிருக்கேன்..., கடுப்பை கெளப்பியிருக்கேன்..., உயிரை வாங்கியிருக்கேன்..., மொக்க போட்டுயிருக்கேன்..., ஆனா, இந்த ஆண்டு முடிவுல ஒன்னு சொல்லிக்க ஆசப்படுறேன்!!
.
.
.
.
.
.
.
.
இதையேதான் 2010துலேயும் செய்யபோறேன்... ஹி.. ஹா.. ஹி.. ஊஊகு.. ஏஹகே.. ஓஹோஹோ..
(அட பஞ்ச பரதேசி பிக்காலி பயலுவோலா.. எவண்டா செருப்ப வீசுனனனனது?)

எல்லா அன்பர்களுக்கும் 2010 ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துகள்!!
><><><><><><><><><><><><><><><>><><><><><><><><><><><><><><><>><><><>

Tuesday, December 22, 2009

ஐயிட்டம் 6... தள்ளிட்டுபோறது யாரு....


நீங்க
யாராவது கேபரே டான்ஸ்சு, ஸ்டிரிப் டீஸ் டான்ஸ்சு, ரெக்கார்ட் டான்ஸ்சு எல்லாம் பாத்துயிருக்கீங்களா? என்னது.. பாத்ததே இல்லியா? என்ன ஆளுங்க நீங்க.. முதல்ல போயி ஞாயித்துகிழமை சன், ஃபாதர், கிரான்ட் ஃபாதர் டிவியில வர்ற ராணி 6 ராசா யாரு நிகழ்ச்சிய மறக்காம பாத்துடுங்க! இதுல ஒரு நன்மை என்னன்னா, மேல சொன்ன டான்ஸ எல்லாம் பார்க்க காசு குடுக்கனும்... ஆனா, இங்க காசெல்லாம் இல்ல.. சொம்மாவே!! இந்த மாதிரி வரலாறு முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்ச்சியை பாத்து ரசிக்கனுமுன்னுதான தாத்தா இலவச டிவி கொடுத்துயிருக்காரு! என்சாய்...

இந்த நிகழ்ச்சிய பத்தி சொல்னும்னா.. ஆறு குத்தாட்டம் ஆடும் குமரிகள் (?????? ஆறு கேள்விக்குறி) 6 கிழபாடுகளை ஆட விட்டு, யாரு அவங்க ராசான்னு தேர்ந்தெடுக்கனுமாம்! என்னங்கடா... நடக்குது இங்க?? இதுல கொடும என்னன்னா.. ஆடுறான் பாருங்க.. அவனோட கண்ணகியும், ஆடுறா பாருங்க.. அவங்களோட சொம்பனும், சொந்தங்களும் சுத்தி உட்கார்ந்து கும்மியடிச்சு உற்சாகப்படுத்துறதுதான். இந்த நிகழ்ச்சி மட்டும் சொந்தமாவா சிந்திச்சிட போறானுங்க?? (இத சிந்திச்சவன் எப்பேர்பட்ட அறிவாளியா இருப்பான்னு நா சிந்திச்சிகிட்டு இருக்கேன்!) என்.டி.டி.வி. இமேஜின் டி.வி-யில் ஒளி"பப்பரப்பா"கிட்டு வர்ற ராக்கி கா சுயம்வர் நிகழ்ச்சியதான் இந்த பிக்காலிங்க இப்டி பிச்சி போட்டுயிருக்குது!!


ஆங்.. அந்த ஆறு யாரு யாருன்னு சொல்ல மறந்துட்டனே! ரகசியா, சுஜா, அனுஜா, தேஜாஸ்ரீ, மேக்னா நாயுடு, அபிநயா ஸ்ரீ (பயப்படாதீங்க.. பயப்படாதீங்க..) அப்புறம் அந்த ராசாங்க பேரு.. பப்லு (எ) ப்ரித்விராசு, சஞ்சய், ராகவ், சக்தி அப்புறம் இன்னம் இரண்டு சனியன் சகடைங்க யாருன்னு தெர்லீங்க!! இந்த சின்னத்திரை கூத்'தாடி'களும், பெரியத்திரையில் இருந்து வந்த 'ஆத்தா'டிகளும்.. சேர்ந்து நம்ம ஆளுங்க மானத்தை காத்தாடிகளா பறக்கவுடுறாங்க.

இதுங்க டிரஸ் எப்ப அவுந்து விழுமோன்னு மூச்சை பிடிச்சிகிட்டு பாத்துகிட்டு இருக்க... ஆம்புளைக்கு பொம்பளை வேஷம் போட்ட கணக்கா ஒரு காம்ப்பைரிங் காட்டேரி குறுக்க வந்து கூத்தடிக்குது.. பேரு சந்தோஷியாம்! நம்ம டாரரராகறதை பார்த்து சந்தோஷபடுறதால, அந்த பேரை வச்சிருக்காங்க போல!. அடுத்ததா, இதுக்கு நடுவர்களா வர்ற ஆளுங்களை பாருங்க.. ஒரு படத்துல நடிச்ச அசோக்கு, அப்பாசு, சிபிராசுன்னு சும்மா வீட்டுல சொறிஞ்சிகிட்டு ஒக்காந்திருப்பவங்களை கூப்பிட்டு வந்து கூவ சொல்றாங்க! ஏனோ.. கவுண்டமணி சொல்ற "குண்டூசி விக்கிறவன்... புண்ணாக்கு விக்கிறவன்.." டயலாக் ஞாபகம் வந்து தொலைக்குது!!



கடந்த எப்பிசோட்ல பிரித்திவிராசும், ரகசியாவும் சேர்ந்து ஆடுனாங்க பாருங்கககக.. ஹய்யோ! மானாட மயிராட (எழுத்து பிழையில்லை) எல்லாம் அவங்க கடியிருக்குற கர்ச்சீப்பை கொண்டுவந்து பிச்சை வாங்கனும்! இந்த கொடுமை இல்லாம, அதுங்க ஆடுனத்துக்கு.. அதுங்களே ஸ்டார் குடுத்துக்குதுங்க.. ஒன்னு ஆடினத்து அப்புறம், பாக்கி உள்ள ஐந்தும் "ஐ வில் கிவ் யூ... 4 ஸ்டார்ஸ்" ன்னு சொல்றப்ப.. "ஐ வில் கிவ் யூ 4 கிக்ஸ்"ன்னு நேர்ல போயி நாலு எத்து விடுனுமுன்னு தோனுது எனக்கு. அதுல இந்த தேஜா ஸ்ரீ கொஞ்சம் ஓவராவே போயி கட்டிபுடிச்சு ஸ்டாருக்கு பதில், முத்தம் குடுக்குது மூதேவி!

ஒருவேளை மிட்நைட் மசாலா பாக்க நம்மாளுங்க நைட்டு வரைக்கு கண்ணு முழிச்சி உடம்பை கெடுத்துக்க வேண்டாம்ன்னு ஒரு நல்லெண்ணத்துல போடுறாங்களோ... என்னவோ.. ! திமுக மகளிர் அணி நடத்துன மாநில மாநாட்டுல தொலைக்காட்சியில பெண்களை ஆபாசமாகக் காட்டுறதை கண்டித்து தீர்மானம் நிறைவேத்துனாங்க. ஆனா, அவங்க நடத்தற சானல்களில் மட்டும் அவுத்துபோட்டு ஆபாசமா ஆடுலாம்ன்னு தீர்மானத்துல ஒரு பாயிண்ட் அவமானமா எழுதியிருப்பாங்க போல... ரைட்டு! எதுவாயிருந்தாலும்,

வாழ்க... சன் டி.வி.!
வளர்க.. அவர்களது பெண்ணியம் பேசும் நிகழ்ச்சிகள்!!

(உன்னை எவன்டா அத எல்லாம் பாக்க சொன்னது?, பிடிக்கலன்னா சேனலை மாத்திகிட்டு போயிட்டேயிரு, நீங்க கோபப்பட்டா நிகழ்ச்சிய நிறுத்திட போறாங்க.. போன்ற பின்னூட்டங்கள் டெலீட் செய்யப்படும் என்று சொன்னா மட்டும் விடவா போறீங்க?)
Blog Widget by LinkWithin